போதைப்பொருள் வழக்கில் வழக்கறிஞர் அனுமதியுடன் முறைப்படி ஜாக்கிசான் மகன் கைது!
பெய்ஜிங்: சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் நேற்று முறைப்படி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் உபயோகிப்பதற்கு மற்றவர்களை அனுமதித்த குற்றத்திற்காக கைதாகியுள்ளார் இவர்.
இவருக்கு அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெய்சீ சான்:
கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி சீன அதிகாரிகள் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையில் ஜெய்சீ சான் மற்றும் தைவான் நாட்டு திரைப்பட நடிகர் கோ கய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள்:
அவர்கள் இருவருக்கும் நடந்த சோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அதனுடன் ஜெய்சீ சான் வீட்டில் இருந்து 100 கிராம் அளவு போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்ய கோரிக்கை:
அடுத்து சில நாட்களில் நடந்த இந்த சோதனையை அடுத்து இருவரையும் முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களிடம் சீன போலீசார் அனுமதி கோரினர்.
வெப்போ தளத்தில் வெளியீடு:
இதற்கு டாங்செங் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து முறைப்படி கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சீனா வெய்போ வலைதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ஒப்புதல் அவசியம்:
சீனாவில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களின் ஒப்புதல் போலீசாருக்கு தேவை.
போதைப்பொருள் எதிர்ப்பு:
கடந்த 2009 ஆம் ஆண்டு போதை பொருள் எதிர்ப்பு தூதர் ஆக சீன அதிகாரிகளால் ஜாக்கி சான் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னுடைய மகனின் செயலுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications