போதைப்பொருள் வழக்கில் வழக்கறிஞர் அனுமதியுடன் முறைப்படி ஜாக்கிசான் மகன் கைது!
பெய்ஜிங்: சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் நேற்று முறைப்படி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் உபயோகிப்பதற்கு மற்றவர்களை அனுமதித்த குற்றத்திற்காக கைதாகியுள்ளார் இவர்.
இவருக்கு அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெய்சீ சான்:
கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி சீன அதிகாரிகள் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையில் ஜெய்சீ சான் மற்றும் தைவான் நாட்டு திரைப்பட நடிகர் கோ கய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள்:
அவர்கள் இருவருக்கும் நடந்த சோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அதனுடன் ஜெய்சீ சான் வீட்டில் இருந்து 100 கிராம் அளவு போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்ய கோரிக்கை:
அடுத்து சில நாட்களில் நடந்த இந்த சோதனையை அடுத்து இருவரையும் முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களிடம் சீன போலீசார் அனுமதி கோரினர்.
வெப்போ தளத்தில் வெளியீடு:
இதற்கு டாங்செங் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து முறைப்படி கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சீனா வெய்போ வலைதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ஒப்புதல் அவசியம்:
சீனாவில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களின் ஒப்புதல் போலீசாருக்கு தேவை.
போதைப்பொருள் எதிர்ப்பு:
கடந்த 2009 ஆம் ஆண்டு போதை பொருள் எதிர்ப்பு தூதர் ஆக சீன அதிகாரிகளால் ஜாக்கி சான் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னுடைய மகனின் செயலுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications