இந்தியாவின் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசார் குடும்பமே சிதைந்து போனது.. புலம்பிய ஜெயஷ் பயங்கரவாதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலால் மசூத் அசாரின் குடும்பமே சிதைந்து போனதாகவும் இதனால் தங்கள் பயங்கரவாத அமைப்பு பெரிய இழப்பைச் சந்தித்ததாகவும் ஜெயஷ்-இ-முகமது ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தளபதி ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மே மாதம் இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இதில் பாகிஸ்தானில் இருக்கும் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜெயஷ்-இ-முகமது
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் மசூத் அசார் தொடர்பாகவும் ஜெயஷ்-இ-முகமது அமைப்பு முதல்முறையாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது ஆபரேஷன் சிந்தூரில் மசூத்தின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியானது. இருப்பினும், ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தது. இதற்கிடையே முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூரில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் தனது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஜெயஷ்-இ-முகமது ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரில் தங்கள் அமைப்புக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதாக அவர் சொல்வது தெளிவாகக் கேட்கிறது.
குடும்பமே சிதைந்தது
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுப்கான் அல்லாஹ் என்ற ஜெயஷ் தலைமையகத்தின் மீது மே 7ம் தேதி இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பம் துண்டுத் துண்டாகப் போனதாகவும் அவரது குடும்பே சிதைந்து போனதாகவும் மசூத் இலியாஸ் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர், "எல்லாவற்றையும் இழந்த பிறகு, மே 7ம் தேதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹவல்பூரில் இந்தியப் படைகளால் சிதைந்துபோனது" என்கிறார்.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவளிப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதையும் ஒப்புக்கொள்வது போல இலியாஸ் பேசியிருக்கிறார். இந்தியாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் தளபதிகளை அனுப்பியதாக மசூத் இலியாஸ் காஷ்மீரி குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக மே மாதம் இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. பாகிஸ்தானின் 12வது பெரிய நகரமான பஹவல்பூர், லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் இருக்கிறது. அந்த இடத்தை இந்திய ராணுவம் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியதில் அசாரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
யார் இந்த அசார்
இந்த அசார் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாவார். ஐநா அமைப்பாலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அசார் இருக்கிறார். 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவர் மூளையாகச் செயல்பட்டவர். இவர் இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications