சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
Recommended Video
ரியாத்: சர்ச்சைக்குரிய வகையில் துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் திரும்பவே இல்லை. அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு அறிவித்தது. ஆனால் இதை முதலில் மறுத்த சவுதி பின்னர் அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது. இச்சம்பவத்தால் துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டது.

ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் , ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டுபின்னர் சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டதாக துருக்கி தெரிவித்தது.
சவுதி பட்டத்து இளவரசர் சல்மானை கடுமையாக விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பின்னணியில் சல்மான் இருந்ததாகவும் துருக்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் அரசு வக்கீல் இன்று தெரிவித்தார்.'
சவுதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் கொலையை நேரடியாக செய்ததாக ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications