கொலைவழக்கில் 53 ஆண்டு சிறை: தீர்ப்பு வழக்கிய நீதிபதி தலைமையில் காதலியை மணந்த குற்றவாளி
லாஸ்ஏஞ்சல்ஸ்: கொலை வழக்கில் கைதாகி 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதி ஒருவர், தீர்ப்பு வழங்கிய நீதிபதி முன்னிலையிலேயே காதலியைக் கரம் பிடித்த விநோதச் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் சாண்டியாகோவை சேர்ந்த டான்னே டெஸ்புரோ (36) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லெமன் கிரோவ் பகுதியை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் இவர் கைது செய்யப்பட்டார்.
சாண்டியாகோ ஹைகோர்ட்டில் நடந்து வந்த விசாரணையின் முடிவில் டான்னே குற்றவாளி என்பது நிரூபணமானது. அதனைத் தொடர்ந்து நீதிபதி பட்ரீசியா கூக்சன், டான்னேக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே யூகித்திருந்த டான்னே, தீர்ப்பு கூறப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது காதலியை நீதிபதி பட்ரீசியா கூச்சன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி, 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற டான்னே, தனது 33 வயது காதலி டெஸ்டினியை மணந்தார். கோர்ட்டில் இருந்த மற்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என அனைவரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
53 ஆண்டுகளுக்குப் பிறகு டான்னே உயிரோடு வெளியே வரும் போது, தானும் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற நம்பிக்கையில் அவர்களது திருமணத்திற்கு தானே கேக் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார் மணப்பெண் டெஸ்டினி.












Click it and Unblock the Notifications