ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் மரணம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் தனது 94ம் வயதில் நேற்று மரணமடைந்தார்.
ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்தவர் மிகைல் கலாஷ்னிகோவ். தற்போது 94 வயதாகும் இவர், சமீபகாலமாக ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மிகைல் தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார். இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப் பட்டது.
தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல், ‘எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, மிகவும் வருத்தமாக உள்ளது' எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications