இங்கிலாந்து மக்கள் கே.எஃப்.சி சிக்கனுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள்?
சிக்கன் பற்றாக்குறையால் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக கடந்த வாரம் மூடப்பட்டன.
கடந்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை, 575 கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த இடர்பாடு கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது.
இந்த இடர்பாடு, லண்டன் மக்களின் உணவு பழக்கம் குறித்தும், அந்த மக்கள் கே.எஃப்.சி சிக்கன் உட்பட பிற சிக்கன் கடைகளில் எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்தும் ஒரு புரிதலை உண்டாக்கி இருக்கிறது.
இவ்வளவு தொகையா...!?
2017 ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்து மக்கள் 2.70 பில்லியன் அமெரிக்க டாலர்கள், கே.எஃப்.சி, பேர்ட் மற்றும் சிக் அண்ட் சோர்ஸ் ஆகிய கடைகளில் செலவிட்டு இருக்கிறார்கள்.
இந்த விற்பனை, 2022 ஆம் ஆண்டு, 3.20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரலாம் என ரீடைல் ரிசர்ச்சர்ஸ் மிண்டலின் ஆய்வு கூறுகிறது.
இங்கிலாந்து மக்கள் பர்கரைதான் அதிகம் விரும்புகிறார்கள். 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் - ஜூன் மாதங்கள் இடையிலான காலக்கட்டத்தில் 60 சதவீத பிரிட்டன் மக்கள் பர்கர் உணவகங்களில் உணவு அருந்தி இருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் சிக்கன் கடைகளில் உணவு அருந்தியவர்கள் 47 சதவீதம் தான்.
இந்தியாவில் புகையிலை இங்கிலாந்தில் துரித உணவு
இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை, சிகரெட் விற்கக் கூடாது என்ற தடை உள்ளது போல, லண்டனில் பள்ளிகள் அருகில் துரித உணவகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
லண்டன் மேயர் சாதிக் கான், 2017 ஆம் ஆண்டு, "இனி பள்ளிகள் அருகே அதாவது 400 மீட்டர் தூரம் வரை, துரித உணவகங்கள் திறக்க அனுமதி தர முடியாது" என்று அறிவித்து இருந்தார்.
சிறுவயது உடல் பருமனை எதிர்கொள்வது தொடர்பாக இந்த அறிவிப்பு அங்கு வெளியிடப்பட்டது.
பிற செய்திகள்:
- ஷொராபுதீன் ஷேக் வழக்கில் மூன்று முறைகேடுகள்: குற்றம் சாட்டும் ஓய்வுபெற்ற நீதிபதி
- 'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை': இலங்கை மீது ஐ.நா அதிருப்தி
- நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்
- கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்















Click it and Unblock the Notifications