பேராபத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள்- கனடாவை விட்டு உடனே வெளியேற சீக்கிய பயங்கரவாதிகள் மிரட்டல்!
டொரன்டோ: கனடாவில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அங்கிருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் உடனே கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைந்து தனி நாடு- காலிஸ்தான் அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடும் சீக்கியர்கள் பல லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். கனடாவின் மொத்த மக்கள் தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1% என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காமல் துரோகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்கிறது கனடா. இதனால் இந்திய தூதர அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்ற, இந்தியாவும் கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவு சீர்குலைந்துவிட்டது.
மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது. இப்பின்னணியில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடா வாழ் பல லட்சம் இந்தியர்களை மிரட்டி இருக்கிறது.
இது தொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை. காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் படிப்புக்காகம் வேலை வாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியர்கள் அருகே உள்ள தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications