Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலிஸ்தான் தீவிரவாதிகள் நாடு கடந்து தொடர் அட்டூழியம்- அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்கு தீ வைப்பு!

Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர். இந்தியாவிலும் அண்மையில் காலிஸ்தான் கோரிக்கையை வலுப்படுத்த இந்த பயங்கரவாதிகள் முயற்சித்தது முறியடிக்கப்பட்டது.

 Khalistani Terror Attack: US San Francisco Indian consulate set on fire

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்பால் சிங் என்ற பயங்கரவாதி மூலம் காலிஸ்தான் கோரிக்கை தூண்டிவிடப்பட்டது. ஆனால் பல நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் அம்ரித்பால்சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் கோரிக்கையை தூண்டிவிடக் கூடிய பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மையில் இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு இந்தியாதான் காரணம், இந்தியாவின் ரா அமைப்புதான் இப்படுகொலையை செய்ததாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ தூதரகமே கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதிகள் நாடு கடந்தும் நிகழ்த்தும் இத்தகைய கொடூர தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. இந்திய தூதரக பணியாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அம்ரித்பால்சிங் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட போதும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. அப்போது காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியவாறு தூதரகத்தின் ஜன்னல், கதவுகளை இரும்பு கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+