தானே எடுத்துக் கொள்வதுதானே செல்ஃபி... ஏ புள்ள என்ன நீ இப்படி செய்ற!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டிவி தொகுப்பாளினியான கிம் கர்தாஷியனை செல்பி எடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டதால் செல்பி எடுக்க பெண் உதவியாளரை நியமனம் செய்தார்.
நவீன செல்போன்கள் வந்த நாள் முதல் போட்டோ எடுப்பது, பாட்டு கேட்பது, வீடியோ எடுப்பது என நீண்டு கொண்டே சென்றது. போன்களில் பிரென்ட் கேமரா வைத்தவுடன் செல்பி எடுக்கும் மோகம் அதிகரித்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் செல்பி எதை பார்த்தாலும் அதனுடன் செல்பி என்று போய் கொண்டிருக்கிறார்கள். சிறிதும் ஆபத்தையும் உணராமல் இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.

பட்டியல்
ஓடும் ரயில் முன், கொடிய விலங்கு முன், பாம்புடன் செல்பி, பாம்புக்கு முத்தம் கொடுப்பது போல் செல்பி, வெள்ளப் பெருக்கின் போது செல்பி, காடுகளில் வனவிலங்குகளுடன் செல்பி என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

தாக்கம்
இதில் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்டாலும் அதன் மூலம் பாடம் கற்பது என்பதே இல்லை. இது போல் செல்பி மோகம் ஒவ்வொருவரையும் பாடாய்படுத்தி வருகிறது. இவர்களை விடுங்க, குழந்தைகள் கூட அருமையாக செல்பி எடுக்கும் அளவுக்கு அதன் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது.

விதவிதமாக அலங்காரம்
இதுபோல் அமெரிக்காவின் டிவி சேனலின் தொகுப்பாளினியும் தொழில் முனைவோருமான கிம் கர்தாஷியன். இவருக்கு செல்பி என்றால் மிகவும் இஷ்டம். தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து செல்பி எடுத்த வண்ணம் இருப்பார். எடுத்த படங்களை சமூகவலைதளங்களில் அனுப்பி வருவார்.

டாக்டர்கள் கறார்
கைகளுக்கும் போனுக்கும் ஓய்வே இல்லாமல் செல்பி எடுத்து வந்த இவருக்கு மணிக்கட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரிடம் சென்ற போது கைகளுக்கு நிச்சயம் ஓய்வளிக்க வேண்டும் என்று கிம்மை "கட்டி போட்டு விட்டனர்".

நியமனம்
இதனால் செல்பி எடுப்பது எப்படி என யோசித்த கிம்முக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதாவது நாம் செல்பி எடுத்தால் தானே பிரச்சினை, இதற்காக ஒருவரை நியமனம் செய்து விட்டால்... அதன்படி செல்பி எடுப்பதற்காகவே ஒரு பெண்ணை சம்பளத்துக்கு நியமனம் செய்துள்ளார்.
இது எப்படி அதுவாகும்
தானே எடுத்தாதாம்மா அது செல்பி... அடுத்தவர் எடுத்தால் அது எப்படி செல்பியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சரி ஒரு விஷயத்தில் அடிக்ட் ஆகிவிட்டால் அதிலிருந்து மீளுவது கடினம்தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications