"சிங்கப்பூர் சிற்பி" லீ குவான் யூ காலமானார்! 31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர்!!
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சிற்பி. தந்தை என போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரமிக்கத்தக்க வகையில் உலகின் முன்னணி வர்த்தக நகரமாக உருமாறியது.
கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் தேசமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications