துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லிபியப் பிரதமர் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil

லிபியாவின் பிரதமர் அலி ஷேடன், நேற்று தலைநகர் திரிபோலியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பிரதமரைக் கடத்திச் சென்றதால் லிபியாவில் பரபரப்பு நிலவியது.
கடத்தப் பட்ட பிரதமரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சமீபத்தில் பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லிபியா தீவிரவாதிகளுக்கு மேற்கத்திய நாடுகள் உதவக்கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரை கடத்தியிருக்கலாம் என யூகம் செய்யப் பட்டது.
இந்நிலையில், கடத்தப்பட்ட பிரதமர் சில மணி நேரங்களிலேயே லிபியப் பிரதமர் விடுவிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications