7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதல் பின்னணியில் 7 பெண்கள்.. பரபரப்பு தகவல்கள்!
லண்டன் தாக்குதலுக்கு உதவியதாக 7 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வேனை ஏற்றியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 7 பேர் பரிதாபமாகப் பலியாகினர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை அப்போதே லண்டன் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்ட தீவிவாதிகளில் குர்ரம் பட் , ரஷீத் ரெடோன் என்று 2 பேரின் அடையாளம் தெரிந்தது. இவர்களில் குர்ரம் பட் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவன். கிழக்கு லண்டனில் பார்க்கிங் பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
ரெடோனும் பார்கிங் பகுதியில் தங்கியிருந்தான் என்றும், அவன் மொராகோ - லிபியா பெற்றோருக்கு பிறந்தவன் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
காய்த்தானவர்களின் 7 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் லண்டனில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்பதை கண்டறிய, போலீசார் விசாரணை வளையத்தை விரிவுப்படுத்தி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.