இந்தியா, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயங்குவதாகக் கூறி தடையை நீடித்த அமெரிக்கா.!!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் உள்ள 54 அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா 1997 ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக இந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது.
2009ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் ஆதரவாளர்கள், நிதி ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. இந்தியாவிலும் இலங்கையில் புலிகள் இயக்கம் செயல்படுவதால் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இடம்பெறும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications