ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து: துணை விமானி பற்றிய புதிது புதிதாக வரும் 'திக் திக்' தகவல்கள்
டுசல்டார்ப்: மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானிக்கு தொடர்ந்து உளவியல் சிகிச்சை அளிக்குமாறு லுப்தான்ஸாவின் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸுக்கு சொந்தமான விமானத்தை வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி 150 பேர் பலியாக காரணமாக இருந்தவர் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28). அவர் ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட் நகர் அருகே இருக்கும் மான்டபாரைச் சேர்ந்தவர். அவர் 14 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் 2008ம் ஆண்டு லுப்தான்ஸாவின் விமானி பயிற்சி படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் இருக்கும் லுப்தன்ஸா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.

மனஅழுத்தம்
2009ம் ஆண்டு லுபிட்ஸ் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதை லுப்தான்ஸாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என்று லுப்தான்ஸாவில் பணிபுரிந்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லுபிட்ஸ்
லுபிட்ஸின் மருத்துவ கோப்புகள் விமானம் விபத்துக்குள்ளான 3வது நாள் தான் தங்கள் கைகளுக்கு வந்ததாக ஜெர்மனியின் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லுபிட்ஸ் உடல் மற்றும் மன பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தற்கொலை
லுபிட்ஸ் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்பே அவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. துணை விமானி ஆன பிறகு அவர் இயல்பாக நடந்து கொண்டுள்ளார் என்று ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள்
அண்மையில் லுபிட்ஸுக்கு தன்னையோ பிறரையோ காயப்படுத்தும் எண்ணம் இருப்பதற்கான அறிகுறிகள் எதையும் மருத்துவர்கள் கண்டறியவில்லை. அவர் உளவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை சம்பவத்தன்று உள்பட பல முறை வேலையில் இருந்து விடுப்பு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications