ஜப்பானில் 4.5 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை!
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜப்பானில் உள்ள மியாக்கோ நகரில் ஹோன்ஷூ கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
இது மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று கூறியுள்ளது. இப்பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.












Click it and Unblock the Notifications