பெரு- பிரேசில் எல்லையை உலுக்கிய அதி பயங்கர பூகம்பம்.. பொலிவியாவும் நடுங்கியது

Subscribe to Oneindia Tamil

லிமா: பெரு நாட்டின் கிழக்குப் பகுதியில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது். இது ரிக்டர் அளவில் 7.5 அலகாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு தலைநகர் லிமாவில் இருந்து 681 கிலேமீட்டர் தொலைவில் பெரு - பிரசில் எல்லை பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Magnitude 7.5 quake strikes Peru

பூமிக்குக் கீழே 600 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பெரு, பிரேசில் நாடுகளின் எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள பொலிவியா நாட்டிலும் பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

பூகம்பத்தின் மையப் பகுதியானது, பெரு நாட்டின் இபேரியா நகரிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் அமேசான் வடிநிலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தப் பகுதியானது பிரேசிலின் பிரேசிலியா நகரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நில அதிர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. நில அதிர்வால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இது சக்தி வாய்ந்த பூகம்பம்தான் என்ற போதிலும் அதிக ஆழத்தில் ஏற்பட்டிருப்பதால், சுனாமி வர வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+