துருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 10 பேர் பலி, 80 பேர் படுகாயம்
துருக்கியில் பயணிகள் ரயில் தடுப்புரண்டு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
அங்காரா: துருக்கியில் பயணிகள் ரயில் தடுப்புரண்டு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
துருக்கியின் பிகுலே பகுதியிலிருந்து இஸ்தான்புல் நகரத்திற்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த நாட்டில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிக அளவில் மழை பெய்து வந்தது. இதனால் சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இஸ்தான்புல் நகரத்திற்கு சென்ற அந்த ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. மொத்தம் 360 பேர் அந்த ரயிலில் பயணித்தனர். இந்த விபத்து காரணமாக 10 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நிறைய பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பலர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் நிறைய பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
மழை, மண் சரிவு காரணமாக ரயில் தடம் புரண்டது என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. 100 க்கும் அதிகமான ஆம்புலன்ஸ், மீட்பு குழுவினர் அங்கு கூடியுள்ளனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications