"பிரெக்ஸிட்"... 10.2 லட்சம் இந்தியர்களின் வாக்கு யாருக்கு விழுந்தது?
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா, நீடிப்பதா என்ற பிரிட்டன் வாக்கெடுப்பில் இந்தியர்கள் இரு வேறாக வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் விலக வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. 17 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனில் கிட்டத்தட்ட 10.2 லட்சம் இந்திய வம்சவாளியினர் வசிக்கிறார்கள். பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரில், இந்தியர்கள்தான் அதிகம் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வாக்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக இருக்குமா அல்லது விலகும் முடிவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது.

பெரும்பாலானோர் எதிர்ப்பு
பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய யூனியனை விட்டு விலகும் முடிவுக்கு எதிர்ப்பாகவே வாக்களித்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவிலும் ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் விலகக் கூடாது என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அதையொட்டியே இந்திய வம்சாவளியினரும் வாக்களித்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

கருத்துக் கணிப்பிலும்
சமீபத்தில் நடந்த ஒரு வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கூட இந்திய வம்சாவளியினரில் 51.7 சதவீதம் பேர் இந்த விலகலுக்கு எதிர்ப்பாக உள்ளது தெரிய வந்தது. 27.74 சதவீதம் பேர்தான் விலகலாம் என்ற முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

நடுநிலை அதிகம்
அதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்பின்போது யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவில்லை என்று 16.85 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானியர்கள்
இதே நிலைதான் பிற ஆசிய வம்சாவளியினர் மத்தியிலும் காணப்பட்டது. பாகிஸ்தானியர்கள் மத்தியில் 56 சதவீதம் பேர் பிரியக் கூடாது என்றும், 26 சதவீதம் பிரியலாம் என்றும் கூறியிருந்தனர். வங்ககேசத்தவர் மத்தியில் 42-17 என்று இது காணப்பட்டது.

பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக நாராயணமூர்த்தி மருமகன்
அதேசமயம், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக், இங்கிலாந்து வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் ஆகியோர் இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்தனர். இருப்பினும், எம்.பிக்கள் கீத் வாஸ், வரேந்திர சர்மா ஆகியோர் விலகக் கூடாது என்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எம்.பிக்கள் ஆதரவு
இந்திய வம்சாவளி எம்.பிக்கள் மத்தியிலும் விலகுவதற்கு பெருவாரியான ஆதரவு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பொருளாதாரத்தை ஐரோப்பிய யூனியன் சீரழித்து வருவதாக இவர்கள் கூறுகின்றனர். விலகும் முடிவை எடுத்தால் இங்கிலாந்து உருப்படும் என்றும், இங்கிலாந்தைச் சேர்ந்த திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications