பாதியிலேயே திரும்பிய ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்: மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை
பெர்த்: இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேட கடலின் தரை பரப்புக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே தேடலை முடித்துக் கொண்டு திரும்பிவிட்டது.
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசியா அறிவித்தது. இதையடுத்து விமானத்தை கடலில் தேடும் பணி 38 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. முதலில் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்தது. அதன் பிறகு அந்த சிக்னலும் அடங்கிவிட்டது.
கடந்த 7 நாட்களாக ஒரு சிக்னலும் கிடைக்கவில்லை.

நீர்மூழ்கி
விமானத்தின் கருப்புப் பெட்டியை தேட ப்ளூஃபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் சிக்னல்கள் வந்த இடத்தில் கடலின் தரை பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆழம்
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடலின் தரை பரப்பில் 16 மணிநேரம் விமானத்தை தேடுவதாக இருந்தது. ஆனால் கடலின் ஆழம் 15 ஆயிரம் அடிக்கும் மேலாக இருந்ததால் கப்பலால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

திரும்பல்
ஆழம் அதிகம் இருந்ததால் நீர்மூழ்கி கப்பல் வெறும் 6 மணிநேரம் தேடிவிட்டு பாதியிலேயே நீரின் மேல்பரப்புக்கு திரும்பி வந்துவிட்டது. அந்த தேடலின்போது மலேசிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நீர்மூழ்கி கப்பல்
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் 15 ஆயிரம் அடி ஆழத்தை தொட்டால் அது தானாகவே நீரின் மேல்பரப்புக்கு திரும்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்
நீர்மூழ்கி கப்பல் ஆறு மணிநேரமாக சேகரித்த தகவலை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நீர்மூழ்கி கப்பல் பாதியில் திரும்பியது அதிகாரிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இன்று
ஃப்ளூஃபின் 21 மாயமான விமானத்தை தேட இன்று மீண்டும் கடலின் தரை பரப்புக்கு செல்ல உள்ளது. அங்கு வானிலை நல்லபடியாக இருந்தால் மட்டுமே நீர்மூழ்கி கப்பல் இன்று தேடல் பணிக்கு பயன்படுத்தப்படும்.

விமானம்
தேடல் பணியில் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதால் விமானத்தின் பாகங்கள் கிடைத்துவிடும் என்று அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அது நடக்காமல் கூட போகலாம் என்று தேடலுக்கு தலைமை வகிக்கும் அதிகாரியான ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications