மலேசியாவில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு!
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மலேசியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகி உள்ளது.
Recommended Video
மலேசியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதுவரை மலேசியாவில் கொரோனா தொற்று நோய் தாக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மலேசியாவிலும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீபெட்டாலிங்கில் நடைபெற்ற சமயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஒரே வாரத்தில் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications