தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான விமானம்?: தேடல் தீவிரம்
பெய்ஜிங்: சீன செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்பட்ட பொருள் மாயமான மலேசிய விமானத்துடையதா என்பதை கண்டறிய கூடுதல் படை தேடுதல் பணியில் ஈடுபடுகிறது.
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருள் ஒன்று கிடந்ததை சீன செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா தெரிவித்தது. தற்போது சீனா தெரிவித்துள்ள பொருள் ஆஸ்திரேலியா குறிப்பிட்ட இடத்திற்கு 120 கிமீ தொலைவில் தான் உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இரண்டு கப்பல்கள் நேற்று அங்கு சென்றன. இந்நிலையில் அந்த பகுதியில் காணப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்களா என்பதை இன்று கூடுதல் படைகள் தேடவிருக்கின்றன.
ஆஸ்திரேலிய கடற்படை தவிர சீனா, இங்கிலாந்து ஆகிய நாட்டு கடற்படை கப்பல்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுகின்றன.












Click it and Unblock the Notifications