போதைப்பொருள் கடத்தல்.. சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடத்தல் குறையவில்லை. எனவே, தண்டனை மேலும் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில், 15 கிராமை விட அதிகமாக போதைப் பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மலேசியா தமிழரான தட்சிணாமூர்த்தி காத்தையா, கடந்த 2015 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து சுமார் 45 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தட்சிணாமூர்த்தி தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்தார். ஆனால், அவரது மேல்முறையீடு எதுவும் ஏற்கப்படாமல் இருந்தது. இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்திக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவரது உடல் நாளை மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் தட்சிணாமூர்த்தியின் பெற்றோரை அரசு தவறாக வழி நடத்தியது என்றும், எனவேதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனவும் தட்சிணாமூர்த்தியின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டதற்கு எதிராகவும் சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினரும் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications