தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது!
Subscribe to Oneindia Tamil
மாலே: தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலத்தீவின் அதிபராக இருந்த போது, கடந்த 2012 பிப்ரவரி மாதம் அதிபர் பதவியில் இருந்தபோது அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது.
2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் முகமது நஷீத்தை தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் கைது செய்து தீவு சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார்.
இந்த கைதுக்கு எதிராக நஷீத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications