Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலத்மாலத்தீவில்தீவில் 45 நாட்கள் நீடித்த அவசரநிலை பிரகடனம் வாபஸ்.. அதிபர் அப்துல்லா யாமீன் உத்தரவு

மாலத்தீவில் 45 நாட்கள் நீடித்த அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் 45 நாட்கள் நீடித்த அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

அப்துல்லா யாமீன் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலைச் சதி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் தொடரப்பட்டதால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Maldives lifts 45 days state of emergency

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி உத்தரவிட்டது. அதனை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு அவசர நிலையையும் அதிபர் அறிவித்தார். அவசரநிலையை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி அவரச நிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மாலத்தீவில் 45 நாட்கள் நீடித்து வந்த அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு எதிராக ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அதிபர் அப்துல்லா யாமீன் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+