மீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Recommended Video
மாலே: அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக நரேந்திர மோடி மாலத்தீவு சென்றுள்ளார் . மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இப்ராகீம் சோலி வரவேற்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சோலி பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். எனினும் அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.
தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு அந்நாட்டு அதிபர் சோலி கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.
அதே நேரம், மாலத்தீவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ரேடார்களை இந்தியா அமைத்துள்ளது. இது மோடியின் தற்போதைய பயணத்தின் போது செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த ரேடார்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளது. பல ஆண்டுகளால மாலத்தீவில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்து வருவதுடன், ராணுவ உதவிகள், பயிற்சிகள் மற்றும் திறமையான கட்டமைப்பு உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது, தற்போதைய பயணத்தின் போது மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தப்படி இல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு சென்றிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாலத்தீவு சுற்றுப் பயணத்துக்கு பின், பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications