21 பெண்ணுறுப்புகளை ஃபிரிட்ஜில் அடைத்து வைத்த டென்மார்க் நபர் கைது
Subscribe to Oneindia Tamil
ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் டென்மார்க்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் செய்த குற்றம், 21 பெண்ணுறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைத்தது.
பெண்களின் பெண்ணுறுப்புகளை சேகரித்து அவற்றை துண்டு துண்டாக வெட்டி இந்த கொடூர நபர் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து வந்துள்ளார். இவற்றை பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஹங்க்வானி முலட்சி கூறுகையில், இந்த நபரின் வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு மயக்க மருந்துகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகளும் சிக்கின.
இந்த நபருக்கு 58 வயதாதகிறது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார். புளோம்போன்டெய்ன் நகரில் வைத்து இவர் பிடிபட்டார்.












Click it and Unblock the Notifications