For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஒருகப் நூடுல்ஸ்க்காக ஏற்பட்ட தகராறில் ஆளைக் கொன்று இதயத்தை தின்றுள்ளார் ஒரு கொடூர வாலிபர்.

சீனாவில் ஹபே மாகாணத்தில் உள்ள சூஷூ பகுதியை சேர்ந்தவர் யுல் லியோ (48). இவர் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் அருகே போ துஆன் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார். யுல் லியோ விடம் வாலிபர் ஒரு கப் நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் கேட்டார். அதற்கு லியோ மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போ துஆன் அவருடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியால் லியோவின் குரல் வளையை போ து யான் அறுத்து விட்டார். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். அதோடு நிற்காமல் லியோவின் மார்பை பிளந்து இருதயத்தை எடுத்து கடித்து சாப்பிட்டார். இதனால் உணவு விடுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது:-அந்த ரத்தம் தோய்ந்த கொடூரமான சம்பவம் என் மனதை விட்டு அகலவில்லை என்று கூறியுள்ளார். உணவு விடுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் போது ரத்தக் காட்டேரிபோல அமர்ந்திருந்த துஆனை கைது செய்து அழைத்துச் சென்றனர்..

English summary
Several people passed out as Bo Tuan, 29, launched a deadly attack on a man who had refused to share his food with him. After being turned down by victim Yul Liao, 48, Tuan pulled out a knife and slit the innocent man's throat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X