செல்போனை துப்பாக்கி என நினைத்த அமெரிக்கப் போலீசார்... சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி
லாஸ் வேகாஸ்: தேடப்பட்டு வந்த குற்றவாளி கையில் இருந்த செல்போனை, துப்பாக்கி எனத் தவறாகக் கருதி அவரைப் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கருப்பின இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து "BlackLivesMatter" என்ற முழக்கத்துடன் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.
இந்நிலையில், தவறுதலாக குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை அதிகப் படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலை முயற்சி உட்பட சட்டத்திற்கு புறம்பான பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் குற்றவாளி கேத் சில்ட்ரஸ் ஜூனியர்(23). இவரை அரிசோனா மாகாண அமெரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நீண்ட காலமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று கேத் லாஸ் வேகாசில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். தொலைவில் இருந்தபடி கேத்தை வான் நோக்கி கைகளை உயர்த்தும்படி போலீசார் வலியுறுத்தினர். ஆனால், திடீரென்று போலீஸ் சுற்றி வளைத்ததால் கேத் திகைத்து நின்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கேத்தின் கையில் துப்பாக்கி இருப்பதாக சந்தேகித்த போலீஸ், உடனடியாக அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கேத் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அருகில் சென்று பார்த்த போது தான், கேத்தின் கையில் இருந்தது துப்பாக்கியல்ல செல்போன் என தெரிய வந்தது.
இது தொடர்பாக லாஸ் வேகாஸ் போலீசார் கடந்த வெள்ளி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அப்போது இந்த தவறு வெளிச்சத்திற்கு வந்தது.
கேத் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேத்தின் தாயாரும், தன் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளார்.
அமெரிக்காவில் போலீஸாரால் சுடப்பட்டுத்தான் கடந்த ஆண்டு அதிக அளவிலானோர் இறந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications