Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

32 ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ரோம்: நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கினால் இன்டெர்நெட், ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு ''என்னடா.. இது வாழ்க்கை'' என்று சலிப்பு தட்டுகிறது.

ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார். ஆனால் தற்போது அவருக்கே தீவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் யார்? அந்த தீவு எது? என்பது பற்றி இப்போது காண்போம்.

தீவில் தஞ்சமடைந்தார்

தீவில் தஞ்சமடைந்தார்

இத்தாலியின் ராபின்சன் க்ரூஸோ என்று அழைக்கப்படும் மவுரோ மொராண்டி (81) நபர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். 1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் இத்தாலி கடற்பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி. அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு-மணல் கொண்ட கடற்கரைக்கு பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர்.இத்தாலியின் ராபின்சன் க்ரூஸோ என்று அழைக்கப்படும் மவுரோ மொராண்டி (81) நபர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். 1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தெற்கு பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி. அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு-மணல் கொண்ட கடற்கரைக்கு பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர்.

பாதுகாத்து வருகிறார்

பாதுகாத்து வருகிறார்

அவருடன் வந்த மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணம் செய்ய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, மவுரோ மொராண்டியின் மனமோ வேறு மாதிரி யோசித்தது. அந்த தீவின் பாதுகாவலர் ஓய்வு பெறுவதாக அறிந்த அவர் தான் வைத்திருந்த படகை விற்று தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை புடெல்லி தீவை கண் இமை போல் பாதுகாத்து வருகிறார் மொரண்டி.

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

இவர் பல ஆண்டுகளாக தீவை எந்தவித பிரச்சனையும் இன்றி பாதுகாத்து, கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார். தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார். அதாவது அங்குள்ள கடற்பாறைகள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகியவற்றை மவுரோ மொராண்டிவை விட அறிந்தவர்கள் வேறு யாருமில்லை. குறித்து இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புடெல்லியை நிர்வகித்து வரும் லா மடாலேனா தேசிய பூங்கா அதிகாரிகள் மவுரோ மொராண்டியை, தீவில் இருந்து வெளியேறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். அவரை புடெல்லி தீவிலேய தங்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசிடம் கேட்டு 70,000 க்கும் மேற்பட்ட வர்கள் கையெழுத்திட்ட மனுக்கள் அனுப்பட்டன.

32 ஆண்டுகளுக்கு பிறகு...

32 ஆண்டுகளுக்கு பிறகு...

ஆனால் தொடர் அழுத்தத்தால் 32 ஆண்டுகளுக்கு பிறகு புடெல்லி தீவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் மவுரோ மொராண்டி. ''32 ஆண்டுகளாக புடெல்லி தீவை நான் பாதுகாத்துள்ளதால் எதிர்காலத்தில் புடெல்லி இதுபோல் பாதுகாக்கப்படும் என்று தான் நம்புவதாக'' மவுரோ மொராண்டி தெரிவித்தார். ஆனால் இவரை போல் இந்த தீவை இனிமேல் யாரும் பாதுகாக்க முடியாது என்று இத்தாலி மக்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+