தெரியாமல் சுட்டு விட்டேன்.. வாசிம் அக்ரமை சுட்டவர் மன்னிப்பு கேட்டார்!
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கியால் சுட்டவர் அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அக்ரமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். சில வாரங்களுக்கு முன்பு கராச்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குத் தனது காரில் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் அவரது காருடன் மோதி விட்டது.
இதையடுத்து அக்ரமுக்கும், காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் அக்ரமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக தோட்டா அக்ரமின் காரில் பட்டதால் அக்ரம் தப்பினார்.

தவறுதலாக நடந்தது:
அந்த நபர் பின்னர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் அமிருல் ரெஹ்மான் எனத் தெரியவந்தது. தற்போது அக்ரமிடம் அந்த நபர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் அக்ரமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புரிந்து கொள்ளாமல் நடந்த சம்பவம்:
அதில், ரெஹ்மான் கூறுகையில், இது தவறுதலாக நடந்து விட்டது. சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்த சம்பவம்.

மன்னிப்பு கோருகின்றேன்:
இந்த சோகமான சம்பவத்திற்கு நான் முதலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் எனது குடும்பமும் உங்களது தீவிர விசிறிகள். உங்களை நான் சுட்டதற்கு எனது வீட்டிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. உங்களுக்கு ஆதரவாகவே எனது குடும்பத்தினர் பேசி உள்ளனர்.

எங்கள் தேசிய ஹீரோ:
நீங்கள் எங்களது தேசிய ஹீரோ. எங்களது பெருமை. உங்களுடன் சண்டை போடுவதை நான் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தவறாக நடந்து விட்ட சம்பவம் அது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் ரெஹ்மான்.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications