ஒபாமாவுக்கு ‘ரிஷின்’ விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்த ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41) என்பவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்' என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பியிருந்தார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். ஜேம்ஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று முந்தினம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை என ஜேம்ஸ்க்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications