பிரான்ஸில் முதலாளியின் தலையை வெட்டி வேலியில் தொங்கவிட்ட நபர் தற்கொலை
பாரீஸ்: பிரான்ஸில் தனது முதலாளியின் தலையை வெட்டி அதை வேலி மீது தொங்கவிட்ட நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஐசரே பகுதியில் உள்ள கேஸ் பேக்டரியில் பணிபுரிந்து வந்தவர் யாசின் சாஹில்(35). அவர் கடந்த ஜூன் மாதம் தனது முதலாளி ஹெர்வே கார்னராவின் தலையை வெட்டி அதை பேக்டரியின் வேலியில் தொங்கவிட்டு சுற்றி ஐஎஸ்ஐஎஸ் கொடிகளை நட்டு வைத்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட சாஹில் பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள ஃப்ளூரி மெரோகிஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சாஹில் பிரான்ஸில் உள்ள பான்ட்ராலியர் நகரில் பிறந்தவர். திருமணமான அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் 2005ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டு உளவுத் துறையின் கவனத்தை ஈர்த்தார். உளவுத் துறை அவரைப் பற்றிய விசாரணையை 2008ம் ஆண்டோடு கைவிட்டது.
மீண்டும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவர் 2013ம் ஆண்டு உளவுத் துறையின் கவனத்தை ஈர்த்தார். பாரீஸில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இதையடுத்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
பிரான்ஸின் ஆர்லியன் பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நடத்திய சதி முறியடிக்கப்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications