ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு?
நடந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பொதுக் குழுக் கூட்டத்தின்போது இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பெரும்பாலான நாடுகள் ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நாவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்தகவல் ஐ.நா.இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் (நவ.7-ந்தேதி) நடந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் 50-க்கும் அதிகமான உறுப்பு நாடுகளின் பேச்சாளர்கள், 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு குறித்த கருத்துக்கள், முன்னோட்டத் திட்டங்கள், அதிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பான அம்சங்களை எடுத்துரைத்தனர்.

அப்போது, பெரும்பாலான நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க ஆதரவு தெரிவித்தன. உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவின் கருத்துக்கள் உலக அரங்கில் முன்வைக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் கூறின.
இந்தியாவுடன் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தின. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதிருப்தி நிலைப்பாடு ஆகியவை குறித்தும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்
இதுகுறித்து ஐ.நாவுக்கான இங்கிலாந்து தூதர் மேத்வ்யு ரிகார்ப்ட கூறுகையில், ஆப்பிரிக்கா, இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications