பாகிஸ்தான் மசூதியில் 'பின்லேடன் நூலகம்'
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: தீவிரவாதி ஒசாமா பின் லேடன் நினைவாக பாகிஸ்தான் மசூதியொன்றில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள லால் மசூதியில் ஒசாமா நினைவு நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் முன்னணி நாளிதளாந நியூயார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
"பாகிஸ்தானில் உண்மையிலேயே கருத்து சுதந்திரம் இருந்தால் எங்கள் நாயகனுக்கு நாங்கள் அன்பை வெளிக்காட்டுவதை தடுக்க முடியாது" என்று மசூதியின் மவுலானா அப்துல் அஜிஜ் கூறியதாகவும், தியாகி ஒசாமா பின்லேடன் நூலகம் என்று அறைக்கதவில் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.












Click it and Unblock the Notifications