சுயஇன்பம் அனுபவித்தால் மறுமைநாளில் கைகள் கர்ப்பம் ஆகும்: இஸ்லாமிய மதபோதகர்
இஸ்தான்புல்: துருக்கியைச் சேர்ந்த மதபோதகர் முசாஹித் சிஹாத் ஹான் சுயஇன்பம் அனுபவிக்கும் முஸ்லீம்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் இஸ்லாமிய மத போதகரான முசாஹித் சிஹாத் ஹான். அவர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பார்வையாளர்களில் ஒருவர் ஹானிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகியும் நான் சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். உம்ரா சென்றபோது கூட சுயஇன்பம் அனுபவித்தேன் என்றார். அதற்கு ஹான் பதில் அளித்தபோது, சுயஇன்பம் அனுபவிப்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
சுயஇன்பம் அனுபவிப்பவர்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று ஹதீத் உள்ளது. நம் பார்வையாளர் சிங்கிள் இல்லை. அதனால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற முடியாது என்றார்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து ஹானை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.