உயிரே போகப்போகுது.. சவூதி அரேபியாவில் இந்தியருக்கு தூக்கு தண்டனை.. போதைப்பொருளால் வந்த வினை
ரியாத்: இந்தியாவை சேர்ந்த 35 வயது இளைஞர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சவூதி அரேபியா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ராசாட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜெய்த் (வயது 36). இவர் சவூதி அரேபியாவில் டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கு அவர் போலீஸ் அதிகாரி வீட்டில் டிரைவராக பணி செய்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முகமது ஜெய்த் கார் ஓட்டி சென்றார்.

அப்போது அவரது காரில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்து 700 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முகமது ஜெய்த்தை சவூதி அரேபியாவின் மெக்கா போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் ஜெத்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2023 ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் முகமது ஜெய்த் அந்த சிறையில் உள்ளார். இதுதொடர்பான வழக்கு மெக்காவில் உள்ள கிரிமினல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முகமது ஜெய்த்துக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி கிதாபூர் சர்க்கிள் போலீஸ் ஆபிசர் பிரமோத் குமார் சிங் கூறுகையில், ‛‛போலீசார் முகமது ஜெய்த்தின் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். அந்த குடும்பத்துக்கு சவூதி அரேபியாவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது'' என்பதை உறுதி செய்தார். மீரட் எஸ்பி கூறுகையில்,''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சவுதி அரசு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்த நோட்டீஸ் ஜூனைத்தின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது'' என்றார்
ஜூனைத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய மனைவி,தாய், தந்தை ஆகியோர் கடும் சோகமடைந்தனர். மரண தண்டனையில் இருந்து ஜூனைத்தை காப்பாற்றுவதற்கு கருணை மனு சவுதி அரசாங்கத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முகமது ஜெய்த்தின் தம்பி முகமது சாத் கூறுகையில், ‛‛எனது அண்ணன் டிரைவர் பணிக்காக கடந்த 2018 ம் ஆண்டு சவூதி அரேபியா சென்றார். அங்குள்ள நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றினார்.அப்போது அவர் விபத்தில் சிக்கினார். அதன்பிறகு அவர் அங்குள்ள போலீஸ்காரரிடம் டிரைவராக பணியாற்றினார். உணவு மற்றும் தினசரி செலவுக்காக அவர் போலீஸ்காரரிடம் பணிசெய்துள்ளார். என் அண்ணன் மீது தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை இந்தியா மீட்டு கொண்டு வர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications