உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்!
மெக்சிகோ சிட்டி: ரயில் விபத்தில் உயிரை விட்ட உரிமையாளரின் உடலை விட்டு அவர் வளர்த்த நாய் பிரிய மறுத்த நிகழ்வு பார்த்தோரை நெகிழச் செய்தது.
"பெருசு இப்போதைக்கு எல்லாம் போகாது போல இருக்கே" "அப்படியே போனாக் கூட அடுத்த மாசம் ஒரு கவர்ன்மென்ட் ஹாலிடே வருது, இல்லாட்டி ஏதாவது ஒரு சண்டேல போச்சுன்னா பரவால்ல" இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது நம்மிடையே வெகு சாதாரணமாக நம்மிடையே புழங்க ஆரம்பித்து விட்ட வார்த்தைகள். இன்னும் சொல்லப் போனால் நம்மில் சிலர் பயன்படுத்திய அல்லது பயன்படுத்துகிற வார்த்தைகளாக மாறிப்போய் விட்ட வார்த்தைகள்.

இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் மனதை நெகிழவைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மாண்டி மொரேலோஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் விக்டர் ரெய்னா. குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் மது அருந்திய நிலையில் மாண்டி மொரேலோஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது ரெய்னா மது அருந்தியிருந்ததால் தள்ளாடியபடி வந்துள்ளார். அவருடன் அவர் வளர்த்து வந்த நாயும் வந்துள்ளது. அப்போது தண்டவாளம் அருகே நடந்து வந்த ரெய்னா தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த ரயில் ஒன்று இவர் மீது மோதியுள்ளது. இதில் நிகழ்விடத்திலேயே ரெய்னா உயிர் இழந்துள்ளார். இதைக் கண்ட அந்த நாய் ரெய்னாவின் உடல் அருகேயே இருந்துள்ளது.
விபத்து நடந்த செய்தி குறித்து அறிந்த போலீசாரும் மருத்துவக் குழுவினரும் இறந்து போன ரெய்னாவின் உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அந்த நாய் அவரது உடலை பிறர் அணுகவே விடவில்லை. பின்னர் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு ரெய்னாவின் உடலை விட்டு பிரித்தனர்.
உரிமையாளர் இறந்தது தெரிந்தோ தெரியாமலோ தன்னை வளர்த்தவரை விட்டு அந்த நாய் பிரிய மறுத்தது, கண்டவர் அனைவரையும் நெகிழ செய்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications