மெக்சிகோவில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
மெக்சிகோ சிட்டி: மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோவை (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
தெற்கு மெக்சிகோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதி அடைந்தனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள பினோடேப்பா டி டான் டுயிஸ் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 24.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications