விமானம் மாயமாகிவிட்டது: மலேசிய அரசு அறிவிப்பு
கோலாலம்பூர்: மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், விமானம் மாயமாகிவிட்டது என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. இந்நிலையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கூறி சீனா 3 செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
ஆனால் அந்த புகைப்படங்கள் தவறுதலாக வெளியாகிவிட்டன என்றும், அது அரசு ஆதரவுடன் வெளியிட்டது இல்லை என்றும் கோலாலம்பூரில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் விமானம் குறித்த உண்மையை கூறுமாறு சீனா மலேசியாவிடம் கேட்டுள்ளது. இந்நிலையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், விமானம் மாயமாகிவிட்டது என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் கூறுகையில்,
இது போன்று இதுவரை நடந்தது இல்லை. விமானம் மாயமாகிவிட்டது. அது மாயமானதில் இருந்து எந்த ஒரு சிக்னலும் அதில் இருந்து வரவில்லை. இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications