வடை போச்சே: 14 ஆண்டுகளாக உலக அழகிப் பட்டத்தை வெல்ல திணறும் இந்தியா
லண்டன்: 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரோலீன் ஸ்ட்ராஸ் வென்றுள்ளார். இந்திய அழகி கோயல் ராணாவால் முதல் 10 இடங்களுக்குள் தான் வர முடிந்தது.
ஆண்டுதோறும் உலக அழகிப் போட்டி நடக்கும். இந்த ஆண்டுக்கான போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ரோலீன் ஸ்ட்ராஸ்(22) உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டும் இந்திய அழகிக்கு பட்டம் கிடைக்கவில்லை.

கோயல் ராணா
இந்தியாவைச் சேர்ந்த கோயல் ராணாவால் முதல் 10 இடங்களுக்குள் மட்டுமே வர முடிந்தது.

முதன்முதலாக
1966ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா பாரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார். உலக அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ரீட்டா பெற்றார்.

ஐஸ்வர்யா ராய்
ரீட்டா பாரியாவை அடுத்து 28 ஆண்டுகள் கழித்து 1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை ஐஸ்வர்யா ராய் வென்றார்.

டயானா ஹேடன்
1997ம் ஆண்டுக்கான உலக அழகிப் படத்தை டயானா ஹேடன் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

யுக்தா முகி
1999ம் ஆண்டு யுக்தா முகி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா
2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவில் இருந்து கடைசியாக உலக அழகிப் பட்டம் வென்றவர். அதன் பிறகு 14 ஆண்டுகளாக ஒரு இந்திய பெண் கூட உலக அழகிப் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications