மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள்: தப்பான படத்தை வெளியிட்ட சீனா
பெய்ஜிங்: மாயமான மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள் என்று கூறி சீனா மூன்று செய்றகைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் சீன கடற்பகுதியில் மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்ததா, கடத்தப்பட்டதா என்று ஒரு விவரமும் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் சீனா மூன்று செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய பகுதிகளின் புகைப்படங்கள் அது என்று கூறப்படுகிறது. அந்த புகைப்படங்களில் 3 பகுதிகள் உள்ளன. அதில் ஒன்று 24க்கு 22 மீட்டர் அளவு வரை பெரிதாக உள்ளது. மற்றவை 13க்கு 18 மீட்டரும், 14க்கு 19 மீட்டரும் பெரிதாக உள்ளன.
அந்த சிதறல் துண்டுகள் மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடையே உள்ள கடல்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணியில் 10 சீன செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications