அமெரிக்க ஆற்றில் மூழ்கிப்போன இந்திய குடும்பம்: 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு
Recommended Video

கலிபோர்னியா: அமெரிக்காவில் மாயமான குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல் கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் வசித்து வந்த சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின் மனைவி சவுமியா(38), மகள் சாச்சி(9), மகன் சித்தாந்த்(12) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா பைலட் வாகனத்தில் ரெட்வுட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் சென்றபோது மாயமாகினர்.

அதில் இருந்து அவர்களை போலீசார் தேடிய நிலையில் தற்போது தான் அவர்களின் உடல்கள் கிடைத்துள்ளது. ஈல் ஆற்றில் மூழ்கிக் கிடந்த காருக்குள் சந்தீப், சாச்சி ஆகியோர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈல் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் சவுமியாவுடையது என்று அடையாளம் காணப்பட்டது.
ஆனால் சித்தாந்தின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சந்தீப் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து சிந்தாந்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் குடும்பத்தாரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போர்ட்லேண்ட், ஓரிகன் ஆகிய இடங்களுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது தான் அவர்கள் மாயமாகினர்.
சான் ஹோஸே பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கூறிய நேரத்தில் வராததால் அவர்களை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications