For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா - பிரிட்டன் உறவு ஆக்கப்பூர்வமாக இருக்கும்: மோடி நம்பிக்கை

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டார்.

Modi, Cameron address joint statement

பின்னர் இந்திய- பிரிட்டன் நாட்டின் உறவுகள் குறித்து மோடி கூறுகையில், உங்கள் தலைமையில் சீராக இருக்கும். இந்திய- பிரிட்டன் உறவு ஆக்கப்பூர்வமாக இருக்கும், இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று டேவிட் கேமரூனிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறுகையில்,

இந்தியாவில் மத சகிப்புத் தன்மையின்மைக்கு இடமில்லை. மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது. இந்தியாவில் தொழில் துவங்கும் தொழில் அதிபர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். இங்கிலாந்து மற்றும், இந்தியாவிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இங்கிலாந்து உதவி வருவதற்கு நன்றி என்று கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், ''ஐநா பாதுகாப்பில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் .பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.

English summary
I'm confident that Indo-UK relationship will further deepen under your leadership: PM Modi to UK PM Cameron.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X