ஒரே நாளில் நேபாள மக்களின் மனதில் ஹீரோவான மோடி

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: பிரதமர் மோடி தான் வளர்த்த நேபாள நாட்டு பையனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த புகைப்படம் தான் நேபாள நாட்டு இணையதளங்களில் பிரபலமாக உள்ளது.

தனது குடும்பத்தாரை பிரிந்த நேபாளத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜீத் பகதூர் சாரு மகர்(26) என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சந்தித்துள்ளார். அதில் இருந்து அவரை தனது வளர்ப்பு மகனாக்கி கொண்டார் மோடி. பகதூருக்கு தனது குடும்பத்தாருடன் மீண்டும் சேர்வதே கனவாக இருந்தது.

modi

வளர்ப்பு மகனின் ஆசை, கனவை புரிந்து கொண்ட மோடி அவரை அவரது குடும்பத்துடன் சேர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை நோபாள் வந்த மோடி பகதூரையும் கையோடு அழைத்து வந்தார். காத்மாண்டு வந்த மோடி பகதூரை அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்து மகிழ்ந்தார்.

பகதூரை மோடி அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தபோது எடுத்த புகைப்படம் தான் தற்போது நேபாள இணையதளங்கள், ஃபேஸ்புக் மற்றும் செய்தி இணையதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.

Modi impact: Nepal man's family reunion an online hit

ஒரே நாளில் மோடி நேபாள மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+