மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும்.... அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது வெளிநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் மிக உயரிய கவுரமாக கருதப்படுகிறது.
குஜராத் கலவரம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா, தற்போது அவர் பிரதமராக பதவியேற்றதும் நாட்டின் உயரிய கவுரவத்தை அளிக்க முன்வந்துள்ளது.

இதுதொடர்பான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் செனட் சபை உறுப்பினர்கள் மார்க் வார்னர், ஜான் கார்யென், டிம் கைனே, ஜிம் ரிஷ் ஆகியோர் கொண்டுவந்தனர்.
அப்போது, ‘இரு நாடுகளுக்கு இடையில் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கூட்டுக் கூட்டத்தில் மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், இதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர் முதன்முறையாக, இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தற்போது இந்தியா வந்துள்ளார். இன்று மோடியைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அப்போது அமெரிக்கா வருமாறு மோடியை அவர் அழைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி குறித்த இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications