ஆன்லைனில் சயனைட் வாங்கி இந்திய மாணவி தற்கொலை - அமேசான் மீது தாய் வழக்கு!
நியூயார்க்: இந்திய மாணவி ஒருவர் சயனைடினால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு சயனைடினை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த இணைய வர்த்தக நிறுவனம் மீது அவரது தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 20 வயது நர்சிங் மாணவி அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு மாணவர் ஒருவரின் செக்ஸ் தொந்தரவு காரணமாக அவர் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்தது. இவர் தற்கொலை செய்ய ஒரு தனியார் "ஆன்லைன் வர்த்தக" நிறுவனம் மூலம் சயனைடு வாங்கினார். அது தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் அமெரிக்காவில் ஒரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மகள் தற்கொலை செய்ய சயனைடு வாங்கி கொடுத்த "ஆன்லைன்" வர்த்தக நிறுவனம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.