குழந்தைக்கு தடுப்பூசி போடமறுத்த தாய்க்கு சிறைத்த தண்டனை
தனது மகனுக்கு தடுப்பூசி போட மறுத்த காரணத்தினால் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஏழு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிச்சிகனை சேர்ந்த ரெபேக்கா பிரேடோ இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததற்காக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவர்களது மகன் பிறந்த போது அவரும் அவரது முன்னாள் கணவரும் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என முடிவு செய்தனர்.
ப்ரெடோவும் அவரது முன்னாள் கணவரும் கடந்த 2008ஆன் ஆண்டு பிரிந்த நிலையில் இருவரும் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
நவம்பர் 2016ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவருடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்த்த்தில் தனது மகனுக்கு நோய்தடுப்பு மருந்து செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் தனது முன்னாள் கணவருடன் உடன்பட்ட நிலையில், தற்போது ரெபேக்கா பிரேடோ தனது ஒன்பது வயது மகனுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை போட அனுமதிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் அவரது முன்னாள் கணவர் தனது பிள்ளைக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என விரும்புகிறார்.
மிச்சிகனில் உள்ள பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக பிள்ளைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதை தவிர்க்கவோ அல்லது தாமதிக்கவோ சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், தம் கணவரோடு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதால்,
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என நீதி்பதி தீர்ப்பு வழங்கினார். அவர் அதனை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பிரேடோ தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது முன்னாள் கணவர் தங்கள் மகனை தற்காலிகமாக வைத்து கொள்ளவும், தடுப்பு மருந்து தரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
- மீசை வைத்ததற்காகத் தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள்; சமூகத் தளங்களில் எதிர்ப்பு பிரசாரம்
- சிசுக்கொலையில் உயிர்தப்பிய மகள்களை பார்க்க துடிக்கும் மதுரை தாய்மார்கள்
- திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்
- காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான பிரத்யேக சுடுகாடு
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications