எண்ணெய் கப்பலில் சென்ற 22 இந்தியர்கள் நைஜீரியாவில் மாயம்.. கடற்கொள்ளையர்கள் காரணமா?
மும்பையை சேர்த்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் காணாமல் போய் இருக்கிறது.
கினியா: மும்பையை சேர்த்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் காணாமல் போய் இருக்கிறது. நேற்று இரவு இந்த கப்பல் காணாமல் போய் இருக்கிறது.
அந்த பகுதியில் கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கப்பல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இந்த கப்பலில் 22 இந்தியர்கள் பயணித்து இருக்கிறார்கள். இவர்களின் நிலை என்ன என்று இப்போதுவரை தெரியவில்லை.

என்ன மாதிரியான கப்பல்
இந்த கப்பல் மும்பையில் இருக்கும் 'ஆங்கிலோ -ஈஸ்டர்ன்' கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த கப்பல் 13,500 டன் கேஸ் எரிபொருளை சுமந்து சென்று இருக்கிறது. இதில் 22 இந்தியர்களும், சில வெளிநாட்டினரும் பயணித்துள்ளனர்.

காணாமல் போனது
இந்த கப்பல் நேற்று இரவு தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலை செல்ல வேண்டிய கப்பல் காணாமல் போய் உள்ளது. அங்கு காலநிலை மிகவும் நன்றாக இருப்பதால் கப்பல் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாயம்
இந்த கப்பலில் சென்ற 22 பேர் குறித்த தகவலும் தெரியவில்லை. 22 பேரின் குடும்பத்தினர் அந்த கப்பல் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்கள் குறித்த செய்தி கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும் என்று அந்த கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உதவி கோரிக்கை
இந்த நிலையில் இந்திய கடற்படை நைஜீரியாவிடம் உதவி கோரி இருக்கிறது. கினியா அரசும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. தற்போது தீவிரமாக தேடுதல் பணி நடந்து வருகிறது. 12 மணிநேரம் ஆகியும் கப்பல் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதால் பதற்றம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications