பெனாசிர் கொலை வழக்கு, தேச துரோக வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
2007ம் ஆண்டு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ குண்டு வைத்து கொல்லப்பட்டார். அப்போது பர்வேஸ் முஷாரப் தான் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது தேச துரோகம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேச துரோக வழக்கு மற்றும் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு முஷாரப்புக்கு சம்மன் அனுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முஷாரப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாரா அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பெனாசிர் கொலை வழக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி பாகிஸ்தானில் விதிகளை மீறி அவசர நிலை பிரகடனப்படுத்திய முஷாரப் மீது 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications