இந்தோனேசியாவில் முஸ்லிம் அழகிப் போட்டி: புத்த கோவிலுக்கு சென்ற அழகிகள்
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் நடந்து வரும் உலக முஸ்லிமா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர்கள் புத்தமத கோவிலுக்கு சென்றனர்.
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் உலக முஸ்லிமா அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டில் இருந்து இந்த அழகிப் போட்டியை உலக முஸ்லிமா பவுன்டேஷன் என்னும் முஸ்லிம் பெண்கள் அமைப்பு நடத்தி வருகிறது. முதலில் இந்தோனேசிய பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது. பின்னர் அனைத்து நாட்டு பெண்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

உலக அழகி, பிரபஞ்ச அழகிப் போட்டி போன்று இல்லாமல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் இஸ்லாத்தின் மீது வைத்துள்ள பற்று, இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட மார்க்க சம்பந்தமான விஷயங்களில் சிறந்து விளங்குவோரே முஸ்லிமா அழகியாக தேர்வு செய்யப்படுவார்.
அழகிப் பட்டம் பெறுபவருக்கு ஹஜ் பயணம், மலேசியா, இந்தியா, ஈரான், துருக்கி, ஐரோப்பாவில் படிக்க ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த ஆண்டு போட்டியில் 25 பேர் கலந்து கொண்டனர். அதில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான பெண்கள் இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் அமைந்துள்ள பழமையான புத்த கோவிலுக்கு சென்றனர்.
முஸ்லிமா அழகிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளவர்கள் புத்தமத கோவிலுக்கு சென்றது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications